குமாியில் ஒரே நாளில் 21 பேருக்கு கொரோன


குமரி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.

 அந்த வகையில் நேற்று குமரி மாவட்டத்தில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திாி மூலமாகவும், சுகாதார பணியாளர்கள் மூலமாகவும் நடந்த பரிசோதனையில் மொத்தம் 21 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டது தெரியவந்தது. 


அதாவது 
அகஸ்தீஸ்வரம்-4, குருந்தன்கோடு-2, முன்சிறை-3, நாகர்கோவில்-5, ராஜாக்கமங்கலம்-3, தோவாளை-2, 
தக்கலை-2 

என மொத்தம் 21 பேர் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். 

தற்போது நோய் தொற்றுக்கு ஆளானவர்களையும் சேர்த்து குமாி மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 84 ஆயிரத்து 363 ஆக உயர்ந்துள்ளது.

இதில் பெரும்பாலானோர் லேசான தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே அவர்கள் தங்களை வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். 


அவர்களை சுகாதாரத்துறையினர் கண்காணித்து வருகிறார்கள்.


Post a Comment

புதியது பழையவை