கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே கருங்கல் செல்லும் சாலையில் பெட்ரோல் பங்க் ஒன்று செயல்பட்டு வருகிறது. அங்கு கடந்த திங்கள் அன்று மாலை , கேரள பதிவு எண் கொண்ட மோட்டார் சைக்கிளில் 23 வயதுடைய ஒரு இளைஞர்ர, தனது காதலியுடன் சென்று கொண்டிருந்தார். அந்த இளம்பெண் வாலிபரை கட்டி அணைத்தபடி பின்னால் அமர்ந்திருந்தார். அவர்கள் மார்த்தாண்டத்தில் பெட்ரோல் விற்பனை நிலையம் அருகில் வாகனத்தை நிறுத்தினர். பின்னர் இருவரும் கீழே இறங்கியுள்ளனர்.
அந்த இளம்பெண் பெட்ரோல் நிலையத்தில் பணியாற்றும் ஒரு பெண் ஊழியர் ஒருவரிடம் சென்று, கழிவறைக்கு செல்ல அனுமதி கேட்டார். அந்த பெண் ஊழியரும் அவரை அனுமதித்தார். தொடர்ந்து முதலில் இளம்பெண் கழிவறைக்குள் சென்றார். அந்த இளைஞர் கழிவறைக்கு வெளியே சிறிது நேரம் நின்று கொண்டிருந்தார்.
பின்னர் உள்ளே சென்ற இளம்பெண் சிறிது நேரம் கடந்து கதவை மெதுவாக திறந்து வெளியே நின்றுக்கொண்டிருந்த இளைஞரைர உள்ளே வரும்படி அழைத்ததாக கூறப்படுகிறது. உடனே அந்த இளைஞர் அவசர அவசரமாக கழிவறைக்குள் புகுந்தார். அவர்கள் கழிவறை கதவை பூட்டிக்கொண்டனர். இதை பார்த்த பெண் ஊழியர் அதிர்ச்சி அடைந்தார். அவர்கள் எப்போது வெளியே வருவார்கள் என பெண் ஊழியர் கவனிக்க தொடங்கினார்.
தொடர்ந்து 15 நிமிடமாகியும் அவர்கள் வெளியே வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த பெண் ஊழியர் கழிவறை அருகே சென்று கதவை தட்டி திறக்குமாறு கூறினார். ஆனால், அவர்கள் கதவை திறக்கவில்லை. எனவே அவர் சத்தம் போட்டு சக ஊழியர்களை அழைத்தார். உடனடியாக பிற ஊழியர்களும் அங்கே வந்தார்கள். அப்போது அவர்களும் கதவை திறக்குமாறு சத்தம் போட்டனர். ஆனால் காதலர்கள் வெளியே வராமல் உள்ளே உல்லாசம் அனுபவித்து கொண்டிருந்ததாக கூறப்படுகிறதுத. ஊழியர்கள் விடாமல் கழிவறையை சூழ்ந்து நின்று கொண்டு காதல் ஜோடியை வெளியே வருமாறு குரல் எழுப்பினார்கள்.
தொடர்ந்து சத்தம் போட்டதால் அந்த ஜோடி பயந்து போய், வேறு வழியில்லாமல் இருவரும் வேர்க்க விறு விறுக்க அரைகுறை ஆடைகளுடன் வெளியே வந்தனர். உடனே அங்கு நின்ற பெட்ரோல் பங்க் ஊழியர்கள் இருவரையும் சுற்றி வளைத்தனர். இதுகுறித்து ஊழியர்கள் மார்த்தாண்டம் போலீசுக்கு தகலும் கொடுத்தனர்.
இதையடுத்து அதிர்ச்சி அடைந்த காதலர்கள் இருவரும் தாங்கள் வந்த மோட்டார் சைக்கிளை அங்கே போட்டுவிட்டு நைசாக தப்பி ஓடிவிட்டனர். அதன்பின்னரே போலீசார் அங்கு வந்தனர். காதலர்கள் இருவரும் தப்பிச்சென்ற நிலையில் அவர்கள் வந்த மோட்டார் சைக்கிளை போலீசார் கைப்பற்றி காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.
அந்த வாகனம் கேரள பதிவு எண் என்பதால், அந்த ஜோடி கேரளாவை சேர்ந்தவர்கள் என்பதும் தெரிய வந்தது. அவர்கள் குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள். மார்த்தாண்டத்தில் பெட்ரோல் நிலைய கழிவறைக்குள் புகுந்து காதல் ஜோடி உல்லாசம் அனுபவித்த சம்பவம் கன்னியாகுமரி மாவட்டத்தில்பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கருத்துரையிடுக