கடன் தொல்லையால் பெண் தூக்கிட்டு தற்கொலை




புதுக்கடை அருகே ராமன் துறை கடற்கரை கிராமத்தை சேர்ந்தவர் அருள்ராஜ் (36). இவர் கடல்தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி மேரி அஸ்வினி (32). இவர் சீட்டு தொழில் நடத்தி வந்துள்ளார். இதனால் கடன் ஏற்பட்டு, மன வருத்தத்தில் இருந்துள்ளார். இந்த நிலையில் சம்பவ தினம் மாலை வீட்டில் உள்ள படுக்கையறையில் உள்ள  மின் விசிறியில் தனது சுடிதார் ஷாலை கழுத்தில் மாட்டி  தூக்கிட்டு தொங்கிய நிலையில் காணப்பட்டுள்ளார்.  


உடனே கணவர் அருள்ராஜ் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அறைக்கதவை உடைத்து மேரி அஸ்வினியை மீட்டு, குமரி அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது தொடர்பான புகாரின் பேரில் புதுக்கடை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Post a Comment

புதியது பழையவை