அரசு ஊழியரால் பெண் விபரீத முடிவு- உருக்கமான கடிதம் எழுதி வைத்து விட்டு தற்கொலை




கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரத்தை சேர்ந்தவர் ரமணி. கணவர் அஜிகுமார் 5 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். ரமணி அரசு பணி கேட்டு கலெக்டர் அலுவலகத்தில் விண்ணப்பம் செய்தார். அப்போது அங்கு ஆர்.ஐ. யாக பணி புரிந்த வேல்முருகன் என்பவர் ரமணியை திருமணம் செய்வதாக கூறி நகை, பணம் பெற்றதாக கூறப்படுகிறது. அதன் பின் வேல்முருகன் வேறொரு பெண்ணை திருமணம் செய்துள்ளதாகவும் இதனால் ஏமாற்றமடைந்த ரமணி கடிதம் எழுதி வைத்துவிட்டு விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.



Post a Comment

புதியது பழையவை