சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படத்தை ஸ்டுடியோ கிரீன், யுவி கிரியேஷன்ஸ் நிறுவனங்கள் தயாரிக்கின்றன. ‘சூர்யா 42’ என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இதில், திஷா பதானி நாயகியாக நடிக்கிறார். அரத்தர், வெண்காட்டர், மண்டாங்கர், முக்காட்டார், பெருமனத்தார் என ஐந்து கதாபாத்திரங்களில் சூர்யா நடிப்பதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் இதன் எடிட்டர் நிஷாத் யூசுப், இது ஃபேன்டஸி கதையை மையமாகக் கொண்ட படம் என்றும் ஆயிரம் வருடத்துக்கு முன்பும் தற்போதைய காலகட்டத்திலும் கதை நடப்பது போல உருவாக்கப்படுவதாகவும் கூறியுள்ளார்.
படத்தின் அடுத்த ஷெட்யூல், இலங்கையில் நடக்க இருப்பதாகக் கூறப்பட்டது. ஆனால், சென்னையில் இந்த மாத இறுதியில் தொடங்க இருப்பதாகப் படக்குழுத் தெரிவித்துள்ளது.
கருத்துரையிடுக