சுசீந்திரம் கோவில் உண்டியல் மூலம் ரூ. 42 ஆயிரம் வசூல்


கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும், பக்தர்களும் வந்து சாமி தரிசனம் செய்துவிட்டு செல்கின்றனர். 

அவ்வாறு வருகின்ற பக்தர்களுக்கு மதிய வேளையில் அன்னதானம் வழங்கும் வகையில் தமிழக அரசு அன்னதான திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. மேலும் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தும் வகையில் கோவில் முகப்பில் அன்னதான உண்டியல் ஒன்றும் வைக்கப்பட்டுள்ளது. 

இந்த அன்னதான உண்டியல் மாதம் தோறும் திறந்து எண்ணப்படுவது வழக்கம். அதே போல் நேற்றும் கோவில் மேலாளர் ஆறுமுகதரன் தலைமையில், ஆய்வர் ராமலட்சுமி, கணக்கர் கண்ணன் ஆகியோர் முன்னிலையில் கோவில் பணியாளர்கள் உண்டியல் பணத்தை எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.

 இதில் வருமானமாக ரூ. 42 ஆயிரத்து 80 வசூல் ஆகியுள்ளதாக கோவில் நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

Post a Comment

புதியது பழையவை