கன்னியாகுமரி மாவட்டம் மேலகிருஷ்ணன்புதூர் அருகே உள்ள பள்ளம் அன்னை நகர் பகுதியை சேர்ந்தவர் மீனவர் ஜான் (44). இவரது மனைவி விஜி. இவர்களுக்கு இரண்டு மகனும், இரண்டு மகள்களும் உள்ளன. இந்நிலையில் ஜானுக்கு மது அருந்தும் பழக்கம் இருந்துள்ளது. இதனால் அவரது மனைவி மது அருந்தக் கூடாது என்று ஜானை கண்டித்துள்ளார்.
இதனால் மன வேதனை அடைந்த ஜான் வாழ்க்கையில் வெறுப்படைந்து நேற்று மாலை வீட்டிலே யாரும் இல்லாத நேரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதைப் பார்த்து விஜி அதிர்ச்சடைந்த நிலையில், இது குறித்து சுசீந்திரம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.
இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் ஜானின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரி பள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்துரையிடுக